சாலைவிபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் - முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

 
stalin

கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

stalin

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் வட்டம், தேவனாம்பட்டினம் கிராமம் கடற்கரை சாலையில் நேற்று (11-10-2023) மதியம் அப்பகுதியிலுள்ள கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரி முடிந்து ஷேர் ஆட்டோவில் கடலூருக்கு வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பண்ருட்டி வட்டம், சிறுவத்தூர் (அ), மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், த/பெ.சரவணன் (வயது 20) என்ற மாணவர், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

MK Stalin

உயிரிழந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். என்று குறிப்பிட்டுள்ளார்.