தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் உயிரிழப்பு.. ஆளுநர் ரவி இரங்கல்..!
தமிழகத்தின் பிரபல செய்தி சேனலான நியூஸ் தமிழ் 24x7-ல் செய்தி வாசிப்பாளராக சௌந்தர்யா அமுதமொழி பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் விவாத நிகழ்ச்சிகளிலும் நேரலை நிகழ்வுகளிலும் பங்கேற்றிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு அரிதிலும் அரிதான எலும்பு மஜ்ஜையில் புற்றுநோய் உருவாகி இருந்தது. இதை அடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு நிதி உதவி அளித்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். "சௌந்தர்யா. ஏ அவர்களின் அகால மரணத்தால் வேதனையடைந்தேன். அவர் ஒரு இளம், பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி!"-என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினர் மற்றும் பிறர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
"சௌந்தர்யா. ஏ அவர்களின் அகால மரணத்தால் வேதனையடைந்தேன். அவர் ஒரு இளம், பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி!"- ஆளுநர் ரவி pic.twitter.com/edNmJ4nU4n
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) July 26, 2024