"தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ₹25 லட்சம் பரிசுத்தொகை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
tn

இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ₹25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இஸ்ரோவின் தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா. அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது. இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற விஞ்ஞானிகள் 9 பேருக்கும் அரசு சார்பில் தலா 725 லட்சம் வழங்கப்படும்.

tn

உழைப்புக்கான அங்கீகாரமாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; முதுநிலை பொறியியல் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் செலவையும் அரசே ஏற்கும். தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமானது; விருப்பு, வெறுப்பற்ற வகையில் அறிவியலை பின்பற்றுபவர்கள் தமிழர்கள் வீரமுத்துவேல் உள்ளிட்ட தமிழர்கள் இஸ்ரோவில் கொடிகட்டிப் பறப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை; இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த விஞ்ஞானிகள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள்" என்றார்.

tn

முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கினார். ஒவ்வொரு விஞ்ஞானிகளின் சாதனைகள் குறித்தும் சில நிமிட குறும்படம் ஒளிபரபரப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.