தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

 
tenkasi ttn

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

tn

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் 20-ந்தேதி  நடைபெற உள்ள ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும்  நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

tn

இந்த  நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க  தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்காக இன்று முதல் ஆக.21 காலை 10 மணி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது என்று  மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன்,ஊர்வலங்கள், அன்னதானம், பொங்கலிடுதல், பால் குடம் எடுத்தல் மற்றும் அனைத்து வகையான வாடகை வாகனங்கள், சுற்றுலா மோட்டார் வண்டிகள், டூரிஸ்ட் மேக்ஸி வண்டிகள் ஆகியவற்றிற்கு நுழையவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.