7,740 புத்தகங்களை பொது நூலகங்களுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

 
tn

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு வழங்கப்பெற்ற 7,740 புத்தகங்களை அரசின் பொது நூலகங்களுக்கு வழங்கினார்.

stalin

கடந்த 2017-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக  பொறுப்பேற்ற போது, முதல்வர் ஸ்டாலின் தன்னை  சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து, அன்புப் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.   இப்படிப் பெறப்பட்ட ஒன்றரை லட்சம் புத்தகங்களை, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

tn

இந்நிலையில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் ஜூலை 15 இன்று, தனக்கு  வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை, தமிழ்நாடு அரசின் பொதுநூலகங்களுக்கு வழங்கினார். நங்கநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளான “கல்வி வளர்ச்சி நாள்” விழாவில்  புத்தகங்களைவழங்கி சிறப்பித்தார்.