சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் - அறநிலையத்துறை

 
natarajar koil

சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 7ம் தேதி அறநிலைத்துறை விசாரணை குழு ஆய்வு நடத்தியது. கோயில் நிர்வாகத்தின் வரவு செலவு உள்ளிட்ட உள்ளிட்டவை பற்றி ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு இன்று கணக்கு கேட்க கோயிலுக்குள் சென்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் 10 காவலர்கள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்தினர். டலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழு ஆய்வு கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.  ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக கணக்கு விவரங்களை தர தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.  கோயிலில் ஆய்வு நடத்த சட்ட ரீதியாக அணுக வில்லை என தீட்சதர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோயிலில் 2009 இல் நடந்த கணக்குத் தணிக்கைகே இன்னும் அறிக்கை தரவில்லை என தீட்சிதர்கள் கூறினர். தீட்சிதர்கள்  கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலைத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றமடைந்துள்ளனர். பின்னர் மாலையில் மீண்டும்  கோவிலில் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறையின் குழுவினர் சென்ற நிலையில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

chidambaram issue

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.  ஜூன் 21,22ஆம் தேதிகளில் கடலூர் அறநிலையத்துறை அலுவலகத்தில் மக்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து பொதுமக்கள் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை. அதிகாரிகள் ஆய்வு நடத்த தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அறநிலையத்துறை பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.