உப்பளம் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் உஷா மரணம் - ஈபிஎஸ் இரங்கல்
புதுச்சேரி உப்பளம் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் உஷா மரணமடைந்த நிலையில் ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி கிழக்கு மாநிலக் கழக முன்னாள் துணைச் செயலாளர் திரு. S. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய மனைவியும், உப்பளம் தொகுதி கழகப் பொதுக்குழு உறுப்பினருமான திருமதி உஷா (எ) K. முனியம்மாள் அவர்கள் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், மேலும், இந்த விபத்தில் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காயமடைந்துள்ளார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
பாசமிகு மனைவியை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் அன்புச் சகோதரர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், திருமதி முனியம்மாள் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.