பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு

 
mask

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 4 ஆயிரம், 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. கடந்த திங்கள் கிழமை இந்தியாவில் 3823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று  முன் தினம் இந்தியாவில்  4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்று 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில்  6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவகிறது. இதனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் கடற்கரை, திரையரங்குகளுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், "பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்என அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் 15 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை அரசு மேற்கொண்டுள்ளது.