“3 நாட்களாக சாதம் மட்டுமே தருகிறார்கள்.. குழம்பு, பொறியல் எதுவும் கொடுக்கல”- விடுதி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 
“3 நாட்களாக சாதம் மட்டுமே தருகிறார்கள்.. குழம்பு, பொறியல் எதுவும் கொடுக்கல”- விடுதி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் “3 நாட்களாக சாதம் மட்டுமே தருகிறார்கள்.. குழம்பு, பொறியல் எதுவும் கொடுக்கல”- விடுதி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அருகே உள்ள சமூக நீதி மாணவியர் விடுதியில் முறையாகவும் தரமானதாகவும் உணவு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி சாப்பாடு தட்டுடன் விடுதி மாணவிகள் இந்திய மாணவர் சங்கத்தினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் அருகே சமூகநீதி மாணவியர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அரசு மன்னர் கல்லூரி மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில்தான் இந்த விடுதியில் சுமார் 100 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வந்த நிலையில் விடுதியில் பட்டியலில் கொடுத்திருக்கும்படி உணவுகள் வழங்குவதில்லை வழங்கும் உணவும் தரமானதாக வழங்கவில்லை என்று கூறி சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் இருந்து வெளியேறி தினசரி வீடுகளில் இருந்து கல்வி பயில கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் தான் தற்போது அந்த விடுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வரக்கூடிய நிலையில் அந்த மாணவர்கள் தங்களுக்கு விடுதி பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கப்படுவதில்லை வழங்கும் உணவும் தரமானதாக இல்லை இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றம் சாட்டி இன்று காலை உணவை புறக்கணித்து சாப்பாடு தட்டுடன் விடுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினரும் பங்கேற்று உள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களோடு புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் சுகுமாரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சுழல் நிலவி வருகிறது.