காயிதே மில்லத் 128வது பிறந்தநாள் - அதிமுக சார்பில் மரியாதை

 
tn

 "காயிதே மில்லத்" அவர்களின் 128-ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

tn

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 128-ஆவது பிறந்த நாளான இன்று காலை (5.6.2023 - திங்கட் கிழமை), சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. C. பொன்னையன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. D. ஜெயக்குமார், கழக மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. பா. பென்ஜமின், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் திரு. ஆர். கமலக்கண்ணன், அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் திரு. தாடி ம. இராசு, கழக மாணவர் அணிச் செயலாளர் திரு. S.R. விஜயகுமார், Ex. M.P., கழக அமைப்புச் செயலாளரும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. ஆதிராஜாராம், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. கா. சங்கரதாஸ், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. S. அப்துல் ரஹிம், சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K.P. கந்தன், Ex. M.L.A., திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சிறுணியம் P. பலராமன், Ex. M.L.A., கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான திரு. R.M. பாபுமுருகவேல், Ex. M.LA., கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டலச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான திரு. M. கோவை சத்யன், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான திரு. Y. ஜவஹர் அலி, கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் திரு. D. சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளும் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள்.

tn

இந்த நிகழ்ச்சியில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டனர்.