"அண்ணாமலைக்கு தெரிந்ததெல்லாம் ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம் தான்" - ஆர்.பி.உதயகுமார் தாக்கு!!

 
tn

கோவை பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பரப்புரையின் போது பாஜக கூட்டணியிலுள்ள கட்சி வேட்பாளர்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு எம்.பி.க்களாக செல்வர்.  மற்ற கட்சிகள் இரும்பு கடைக்கு செல்லும் என்று விமர்சித்து இருந்தார் . 

Annamalai

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் அண்ணாமலையின் பேச்சு குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் , பாஜக இரும்பு கடைக்கு போய்விடுமா? அப்படியா  அவர் சொல்கிறார்.  நீங்கள் நன்றாக கவனத்திற்கு மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.  அண்ணாமலை ஒரு ரெடிமேட் அரசியல்வாதி.  இரண்டு விதமான சட்டையை நாம்  போடுவோம் . ஒன்று நாம் அளவு எடுத்து நமக்கு சரியாக பொருந்தக்கூடிய சட்டையை அணிவோம்.  இன்னொன்று ரெடிமேட்.  ஆத்திர அவசரத்திற்கு நமக்கு சட்டை கிடைக்கவில்லை , நேரமில்லை என்றால் ரெடிமேட் சட்டையை வாங்கி அணிந்து கொள்வோம்.  அந்த மாதிரி பாரதிய ஜனதா கட்சியில் தலைவர் பதவிக்கு ஆள் இல்லை என்பதால் ரெடிமேடாக அண்ணாமலையை அழைத்து தலைவர் ஆக்கினர்.  அதனால் அவர் ரெடிமேட் டயலாக் தான் பேசுவார்.  அவருக்கு தெரிந்ததெல்லாம் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம், இரும்பு கடை என்பதுதான்.

rb udhayakumar

அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகம் என்பது எஃகு கோட்டை. அவருக்கு வரலாறு தெரியாது. அவர் ஒரு ரெடிமேட் தலைவர். ரெடிமேடாக இரண்டு டயலாக்கை மனப்பாடம் செய்துவிட்டு ஊடகத்தை சந்தித்து பேசுவார்.  மறுபடியும் சென்று மனப்பாடம் செய்வார்; மறுபடியும் வந்து பேசுவார். கடைசியில் அவர் திரும்ப வீட்டுக்கு போயிடுவார்.  தமிழ்நாட்டில் அவருக்கு எந்த வேலையும் இல்லை என்றார் .