கோவை வந்தடைந்தார் ராகுல் காந்தி - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

 
rahul

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். 

மோடி சமூகம் குறித்த அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனையால் காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி., பதவி பறிபோனது. இதையடுத்து இந்த தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை  விதித்துள்ள நிலையில் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில் தனது சொந்த தொகுதியான வயநாட்டை பார்வையிடுவதற்காக இன்றும் , நாளையும் ராகுல் காந்தி கேரளா செல்லவுள்ளார். முன்னதாக ராகுல் காந்தி இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்கிறார்.  வயநாடு செல்லும் வழியில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் ராகுல் காந்தி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 9.15 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தி கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராகுல் காந்தி ஊட்டி புறப்பட்டு சென்றார்.  அங்குள்ள ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.