விவசாயிகளை சுட்டுக்கொல்கிறீர்கள்...இதுதான் ஜனநாயகமா? - ராகுல் காந்தி கேள்வி!

 
Rahul

மோடி அவர்களே, நீங்கள் ஜனநாயகத்தை கொன்றுவிட்டீர்கள் என்பது மக்களுக்கு தெரியும், மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது: விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கேட்டால் அவர்களை சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள் - இது தான் ஜனநாயகமா?  இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்கள் சொல்வதை கேட்க மறுக்கிறார்கள்  - இது தான் ஜனநாயகமா? முன்னாள் ஆளுநர் உண்மையைச் சொன்னால், சிபிஐ வீட்டுக்கு அனுப்புகிறார்கள் - இது தான் ஜனநாயகமா?  எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குகிறார்கள் - இது தான் ஜனநாயகமா?
 
பிரிவு 144, இணையத்தடை, கண்ணீர் புகை குண்டுகள் - இது தான் ஜனநாயகமா? ஊடகங்கள், மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு உண்மையின் ஒவ்வொரு குரலையும் ஒடுக்கிவிட்டார்கள் - இது தான் ஜனநாயகமா? மோடி அவர்களே, நீங்கள் ஜனநாயகத்தை கொன்றுவிட்டீர்கள் என்பது  மக்களுக்கு தெரியும், மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் குறிப்பிட்டுள்ளார்.