மழை பாதிப்பு - தமிழக அரசுக்கு மத்தியக்குழு பாராட்டு

 
tn

 தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

rain

இந்நிலையில்  திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் 2வது முறையாக ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் கார்த்திகேயனுடன் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையிலான மத்திய குழுவினர் ஆலோசனை கருப்பன் துறை பகுதியில் இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டனர்.  சீவலப்பேரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கூட்டு குடிநீர் திட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

tn

மழை பாதித்த தென்மாவட்டங்களில் தமிழக அரசின் பணி சிறப்பாக உள்ளதாக மத்தியக்குழு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். தமிழக அரசுக்கு மத்திய குழுவில் உள்ள டெல்லி ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பாலாஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.