மதியம் 1 மணி வரை சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யுமாம்!!

 
rain

அடுத்த 3 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

karur rain

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

rain

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை ,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதேபோல புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது.