தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக் இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

tn
,
தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை நீலகிரி ,கோயம்புத்தூர், ஈரோடு ,திருப்பூர்,தேனி, கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,சிவகங்கை ,இராமநாதபுரம் ,கடலூர் ,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் ,திருவள்ளூர் ,சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.