அடுத்த 3 மணிநேரத்திற்கு 26 மாவட்டங்களில் மழை!!

 
rain

அடுத்த 3 மணிநேரத்திற்கு 26 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று  வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Rain

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் ,கிருஷ்ணகிரி ,திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி ,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ,சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ,விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.