அடுத்த 3 மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை!!

 
rain

அடுத்த 3 மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தென் இந்திய பகுதிகளின் மேல் மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் , மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் வருகிற 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tn

இந்த சூழலில்  தமிழகத்தில் காலை 10 மணிவரை  திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது பிற்பகல் 1 மணிவரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.