தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

 
rain rain

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக, இன்று (ஆக10) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர்  மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மழை

ஆக 11 முதல் ஆக.16 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,   லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும்  நாளையும், (ஆக 10, 11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.