மதியம் 1 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழ்நாட்டில் மதியம் 1 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு ,மையம் தெரிவித்துள்ளது. 

rain

தமிழகத்திற்கு 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்றும்,  நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

இந்நிலையில் திருவள்ளூர் , சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  நாகப்பட்டினம் , திருவாரூர் , தஞ்சாவூர் , திருச்சி பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.