‘பொன்னியின் செல்வன்’ ராஜ ராஜ சோழனின் 1038வது சதயவிழா - அமமுக சார்பில் மரியாதை!!

 
tn

‘பொன்னியின் செல்வன்’ ராஜ ராஜ சோழனின் 1038வது சதயவிழாவையொட்டி அமமுக  நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

tn

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி முறையை நடைமுறைப்படுத்திய மாமன்னரும், சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருமான 'பொன்னியின் செல்வன்' ராஜ ராஜ சோழனின் 1038வது சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

tn
இதையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பெருவுடையார் கோவில் அருகில் அமைந்துள்ள இராஜராஜ சோழரின் திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச்செயலாளரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.M.ரெங்கசாமி, தஞ்சாவூர் மாநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு.P.ராஜேஸ்வரன், கழக மாணவர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான திரு.A.நல்லதுரை, கழக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திரு.A.G.தங்கப்பன் மற்றும் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட/வார்டு கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி/கிளைக் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்." என்று குறிப்பிட்டுள்ளார்.