உத்தரப்பிரதேச முதல்வருடன் ஜெயிலர் படம் பார்க்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி மடம், வியாசர் குகை, சரஸ்வதி நதி மறையும் இடத்திற்கு சென்று புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன, அத்துடன் மகா அவதார் பாபாஜி குகைக்கு செல்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 2 மணி நேரம் ரஜினிகாந்த் மலை ஏறிய புகைப்படங்களும் வெளியாகின. இதையடுத்து கடந்த 17ஆம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னை நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். அத்துடன் உத்தரப்பிரேத முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் இன்று மாலை ஜெயிலர் படம் பார்க்கிறார் .