சமூகநீதி நாயகன் வி.பி.சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ராமதாஸ்

 
ramadoss

100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற இலக்கை எட்ட சமூகநீதி நாயகன் வி.பி.சிங்கின் பிறந்தநாளில் மீண்டும் உறுதியேற்போம் என பாம நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சமூகநீதி தளத்தில் என் மனம் கவர்ந்தவர்களில் ஒருவரும், எனது நண்பருமான முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 93-ஆம் பிறந்தநாள் இன்று. இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வந்த  இட ஒதுக்கீட்டை எதிர்ப்பு சுனாமிகளை புறம்தள்ளி செயல்படுத்தியவர்; அதனால் ஆட்சிக் கட்டில் பறிக்கப்பட்டதை அலட்சியம் செய்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், மக்கள்தொகைக்கு இணையான அளவில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனால், பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% உச்சவரம்பு தான் அதற்கு தடையாக  இருந்தது. 

ramadoss

உயர்வகுப்பு ஏழைகளுக்காக இட ஒதுக்கீட்டு வழக்கில் அந்த உச்சவரம்பு தகர்க்கப்பட்டு விட்ட நிலையில், இடஒதுக்கீடு என்ற தத்துவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இடப்பங்கீடு என்ற தத்துவத்தை பின்பற்ற வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் 100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற சமூகநீதி இலக்கை அடைவது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், போராடவும் சமூகநீதி நாயகன் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளில் நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.