குழந்தைகளே தெய்வங்கள்... அவர்களைக் கொண்டாடுவோம், மகிழ்ச்சியடைவோம்!

 
pmk

குழந்தைகள் தினத்தையொட்டி ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார். 

tn

இந்தியாவில் குழந்தைகள் நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் நாளை கொண்டாடுகின்றன.


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "உலகில் மகிழ்ச்சியை மட்டுமே  வழங்கும் உயிர்கள் குழந்தைகள்.  அன்னையின் அன்புக்கும் எல்லை இருக்கலாம்.... ஆனால்,  குழந்தைகள் வழங்கும் மகிழ்ச்சிக்கு  எல்லை இல்லை. அதனால் தான்  எனது பார்வையில் குழந்தைகள் அனைவரும் தெய்வங்கள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் எனக்கு கவலைகளே இருக்காது. மனித வாழ்க்கையில் எல்லாமுமாக இருக்கும் குழந்தைகளை  இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம், மகிழ்ச்சியடைவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார். 
.