ராமநாதபுரம் மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்ல தடை!!
Jul 19, 2023, 12:44 IST1689750846441
ராமநாதபுரம் மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக்காற்று வீசி வருவதன் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளர்ப்பு துறை அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடிக்க அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ள ரத்து செய்யப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கு சுமார் 10 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இரண்டாவது நாளாக என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.