ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு..!!

 
மீனவர்கள் போராட்டம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்

எல்லை தாண்டி மேம்படுத்ததாக கூறிய ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட  மீனவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் . இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 2,3 ஆண்டுகள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.   இந்த நிலையில்  மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நடைபெற்றது. அதில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மீனவர்கள்

அத்துடன் இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 13ஆம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும்,  ஆகஸ்ட் 19ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.  அத்துடன் ஆகஸ்ட் 15ம் தேதி  சுதந்திர தினத்தன்று ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொள்கின்றனர் . மேலும் இலங்கை கடற்படையால் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் கால வரலாற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.