சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்!!

 
tn

மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

tn

தமிழக அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி,  திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி,  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளை சுட்டிக்காட்டி சில குறைகள் இருப்பதாக கூறிய மத்திய அரசு,  மருத்துவ படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின்  இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்வதாக அறிவித்தது .ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு  பல்வேறு எதிர்ப்பு கிளம்பியது.

ma subramanian

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகை பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்து ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது,  கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படாதது ஆகியவற்றை காரணமாக காட்டி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது சரியில்லை என்று கூறப்பட்டது.  இது குறித்து இந்திய மருத்துவ ஆணையத்தின் அறிக்கை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் விளக்கம் அளித்தது .இருப்பினும் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்க தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது.

masu

சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படுவதாக முன்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  ஸ்டான்லி,  தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகள் ஐந்தாண்டுகள் தொடர்ந்து இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது . மத்திய அரசின் அனுமதி தொடர்பான எழுத்துப்பூர்வ உத்தரவு விரைவில் கிடைத்துவிடும் . தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை  மாநில அரசே  நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.