கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு
கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவில் கொள்ள சம்பவம் நடந்தது. இது தொடர்பாக ஜோஸ் ஆலுகாஸ் சார்பில் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 200 சரவன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டது அரூரை சேர்ந்த விஜயகுமார் என போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளை விஜயகுமாரின் தாயாரிடம் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள விஜயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.