ஏப்.11ல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு..

 
tn

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 11ம் தேதி பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக  பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்காக கடந்த ஆக.1-ம் தேதி நிலவரப்படி உள்ளஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) பணியிடங்கள் நிர்ணயம் செய்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கையாக பெறப்பட்டுள்ளது.

ஆசிரியர்

அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 3,123 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 407 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 400 மாணவர்களுக்கு மேல் இருக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் நிலை-1 பதவியில் ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர். 183 பள்ளி களில் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பதவியில் ஆசிரியர்கள் இல்லை. ஆனால், 400-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள 163 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்.

எனவே, விதிகளின்படி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் அடிப்படையில் இடமாறுதல் செய்யப்படுவர். இதற்கான கலந்தாய்வு, ஏப்.11-ம் தேதி இணையவழியில் நடத்தப்படும். பணி நிரவல் கலந்தாய்வுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வை நடத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.