செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைப்பு

 
tn

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

tn

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாக உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.  இதனால் நீர்மட்டமானது 22.53 அடியாக உயர்ந்தது.  இதன் காரணமாக இரவு வினாடிக்கு 2088 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3098 கனஅடியாக அதிகரித்தது.  இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபநிநீர் திறக்கும் பணி தொடங்கியது.இன்று காலை 9 மணிநேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6,000 கனஅடி ஆக உயர்ந்தது.  2500 கனஅடியிலிருந்து 6000 கன அடியாக உபரி நீர் திறக்கப்பட்டது. 

tn

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 6,000 கன அடியில் இருந்து 4,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 2,600 கனஅடியாக உள்ள நிலையில் அது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.