ரீல்ஸ் மோகம்- ஓடும் ரயிலில் சாகசம் செய்த சிறுவன் ஐசியூவில் அனுமதி
சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் படியில் தொங்கி சாசகம் செய்த மாணவன் அபிலாஷ் (16) கீழே விழுந்து படுகாயமைடைந்தார்.

சமூக வலைதளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். சினிமா பாடலுக்கு நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் ரீல்ஸ்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அதில் சிலர் இறக்கவும் செய்கின்றனர். அது போல் ஒரு சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.
ஓடும் ரயிலில் சாகசம் செய்த சிறுவன் மின்கம்பத்தில் மோதி படுகாயம் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி#Chennai | #Train | #Accident pic.twitter.com/E324SIUKqs
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 13, 2024
சென்னை ராயபுரத்தில் மின்சார ரயிலின் படியில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த 16 வயது சிறுவன் அபிலாஷ் மின் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட சக பயணிகள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விபத்து குறித்து ராயபுரம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


