இறந்தும் 7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்!!

 
tn

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில்  7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

death

சென்னை மணலி புதுநகர் எழில் நகரை சேர்ந்தவர் மகேஷ்.  இவர் மின் சக்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.  இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கடந்த  5ம் தேதி மகேஷ் தனது நண்பரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு பின்னர் பைக்கில் தனது வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி உள்ளது.  இதில் கீழே விழுந்த மகேஷின்  தலையில் பலமாக அடிபட்டுள்ளது. 

tn

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மகேஷை  மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் நேற்று முன்தினம் மகேஷ் மூளை சாவு அடைந்தார்.  இதனால் அவரது உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன் வந்தனர்.  அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் , இரண்டு சிறுநீரகம் , இதய வால்வு, தோல், இரண்டு கண்கள் என மொத்தம் 7 உறுப்புக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 5 நோயாளிகளுக்கும்,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2  நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டது.  விபத்தில் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததால் அதனை பயன்படுத்த முடியாமல் போனது.  மகேஷின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் சுமார் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.