கள்ளச்சாராய சிகிச்சை- மருந்து வெளியில் இருந்து வாங்கி வர சொல்வதாக உறவினர்கள் வேதனை
கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறவருக்கு வெளியில் தனியார் மருந்தகங்களில், மருந்து வாங்கி வர புதுச்சேரி ஜிப்மர் டாக்டர்கள் பரிந்துரைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட பெரியசாமி, மகேஷ், கண்ணன், சிவராமன், ராமநாதன், பாலு, திருமாவளவன், மோகன், மாயக்கண்ணன், ஏசுதாஸ், உள்ளிட்ட 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பத்து பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 7 பேர் சாதாரண வார்டுகளில் மாற்றப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜிப்மர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிகிச்சைக்கு தேவையான அத்தனை மருந்துகளும் ஜிப்மரில் இல்லை. அதனால் கள்ளச்சாராய சிகிச்சைக்கு அவசியமான சில மருந்துகளை வெளியில் மருந்துகளில் வாங்கி வர பரிந்துரை செய்கின்றனர். இந்த மருந்துகள் வாங்கி தர தங்களிடம் போதிய பணம் இல்லை என அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சிகிச்சைக்கு ஒவ்வொரு வேலைக்கும் 600 முதல் 1200 ரூபாய் மருந்து மாத்திரைகள் வாங்கி வர டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். தினசரி பல்லாயிரம் ரூபாய் செலவாகிறது அந்த அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை என மருந்து சீட்டுகளை காண்பித்து அழுகின்றனர். தினமும் கட்டிட வேலைக்கு சென்று சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கும் எங்களிடம் வெளியில் மருந்து வாங்கி வர கூறுவது சிரமமாக உள்ளது.


