இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த 3 பேர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி!!

 
stalin

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்கள் நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து , கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

ttn

 காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் சேர்ந்த படைவீரர் ஏகாம்பரம் மனைவி குமாரி ,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தை சேர்ந்த படைவீரர் கருப்பசாமி மனைவி தமயந்தி , தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தை சேர்ந்த படைவீரர் பழனிகுமார் மனைவி பாண்டியம்மாள் ஆகியோருக்கு தமிழக முதல்வர் கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அளித்தார்.

ttn

மேலும் லடாக்- காரகோரம் கணவாயிலிருந்து கணவாயிலிருந்து பனிச்சறுக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழ் நாட்டு ராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கேப்டன் குபேர காந்தியின்  சாதனையைக் கவுரவித்து,  தமிழக முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் தலைமை செயலாளர் இறையன்பு , பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன்,  பொதுத்துறை சிறப்பு செயலாளர் கலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.