"நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த விடியா ஆட்சியில் இடம் கிடையாது" - ஈபிஎஸ்

 
eps

களக்காரி விஏஓ ராஜினாமா வருத்தத்தை அளிக்கிறது என்று  ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்து துரை பிரிதிவிராஜ் என்பவர் விஏஓவாக பணிபுரிந்து வருகிறார். இவர் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை எனக் கூறி தனது விஏஓ பதவியை  ராஜினாமா செய்துள்ளார். குடும்ப சூழ்நிலவுக்காக ,சுயநலத்திற்காக, அறக்கட்டளை சார்ந்த அர்ப்பணிப்பு சமூக பணிகளுக்காக , பொதுநல நோக்கத்திற்காக எனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நிம்மதி பெருவாழ்வு வாழவே ராஜினாமா கடிதம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய VAO தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார், சில தினங்களுக்கு முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு VAO மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு  ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

EPS

தற்போது 2019 அதிமுக ஆட்சியில் சிறப்பாக பணியாற்றி என்னிடம் விருது பெற்ற கிராம நிர்வாக அதிகாரி அருப்புக்கோட்டை ,களக்காரி VAO திரு.துரை.பிருத்விராஜ் தற்போது தன் பணியை நேர்மையாக செய்ய இயலவில்லை என்பதால் வேலையை ராஜினாமா செய்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த விடியா ஆட்சியில் இடம் கிடையாது என்பதும் இதன்மூலம்  நிருபணமாகிறது,

இவ்வாட்சியில் அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததாலும் , மக்கள் பணி செய்வதற்கு நிர்வாகமே தடையாக இருப்பதாலும் பல்வேறு நிர்வாக திறமையுள்ள அதிகாரிகளை இழந்து வருகிறோம் ,

null



அரசு அதிகாரிகள் என்றும் மனம் தளராது, தொடர்ந்து மக்களுக்கு நல்ல பணிகள் பல  செய்திட வேண்டுகோள் விடுக்கிறேன்,விரைவில் கழக ஆட்சி மலரும் , நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி கூறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.