“தமிழக சட்டம், ஒழுங்கு கவலை அளிக்கிறது” பிரதமரிடம் புகார் கூறிய ஆளுநர்
Jul 16, 2024, 15:40 IST1721124604000
டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று காலை டில்லிக்கு புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக பிரதமரிடம் பேசியதாக தெரிகிறது.
பிரதமருடனான சந்திப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டு மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.