விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது: ஆளுநர் ரவி

 
vijayakanth

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Social Discrimination Still Major Problem In TN: Governor Jabs DMK Over  'Sanatana Dharma' Row - Oneindia News

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார், அவருக்கு வயது 71. பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை தரப்படுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த சூழலில் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.


இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவி்த்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க  தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான திரு. விஜயகாந்த்  அவர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை  அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய  பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.