சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் விபத்து - பெண் ஊழியர்கள் காயம்!
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவொற்றியூரில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று ராமாபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே கார் சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனார். இந்த விபத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


