பொன்னார் கைதை கண்டித்து குமரி முழுவதும் சாலைமறியல்
முன்னாள் மத்திய துணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கைதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூர் பாஜக நிர்வாகி பாஸ்கரை பாஸ்கர் மீது தாக்குதல் நடத்திய திமுக எம்.பி. ஞானதிரவியத்தையும், அவருடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் இரவு 10 மணிக்குள் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால் திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள பாரதி சிலை அருகே அமர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம் என்று நேற்று இரவு ஒன்பது மணிக்கு மேல் எச்சரிக்கை விடுத்திருந்தார் பொன். ராதாகிருஷ்ணன் .
10 மணிக்குள் திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யாததால், அதை கண்டித்து பொன்.ராதாகிருஷ்ணன் பாரதி சிலையருகே அறப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து பொன். ராதாகிருஷ்ணனை திருநெல்வேலி போலீசார் கைது செய்தனர். திமுகவின் இந்த அராஜகப் போக்கை கண்டிக்கிறோம் என்று பாஜகவினர் கொதித்தெழுந்தனர்.
இந்நிலையில், பொன். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.