கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளை - 100 சவரன் நகைகள் திருட்டு

 
jos alukas

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை காந்திபுரம் பகுதியில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுகாஸ் இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று காலை ஊழியர்கள் கடையை திறந்து பார்த்த போது கடையில் உள்ள நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து ஜோஸ் ஆலுகாஸ் சார்பில் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 100 சரவன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தனி நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த நகை கடை ஊழியர்களிடமும் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடையில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.