மனைவி கண்முன் வெட்டி சரிக்கப்பட்ட பிரபல ரவுடி ஜான்! சேலத்தில் பரபரப்பு

 
ட்க்ஷ் ட்க்ஷ்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேலம் ரவுடி ஜான் வெட்டிக படுகொலை செய்யப்பட்டார்.

ச்

 
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலைஇயில் சேலம் ரவுடி ஜான் வெட்டிக படுகொலை செய்யப்பட்டார். மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றபோது ரவுடி ஜானை காரில் துரத்திய 5 பேர் கொண்ட கும்பல் விபத்தை ஏற்படுத்தி, மனைவியின் கண்முன்னே ரவுடியை வெட்டிக்கொன்றது. சேலத்தில் இருந்து திருப்பூர் சென்ற ஜான் (எ) சாணக்கியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்ட கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றார்.

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீஸ் சுட்டுப் பிடித்தது. பச்சபாளிமேடு பகுதியில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற கார்த்திகேயன் என்பவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் அவருடன் சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய மூவரும் சுட்டுப் பிடிக்கப்பட்டனர். இவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.