தமிழ்நாட்டில் ரூ.1, 297 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல் - சத்ய பிரதா சாகு தகவல்

 
tn

தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டுள்ளன.

tn

தமிழ்நாட்டில் இதுவரை 31,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மட்டுமே மிக அமைதியாக தேர்தல் நடக்கிறது. மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை (ஏப்.18) வரை தபால் வாக்கு செலுத்தலாம்; பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.

sahu


மக்களின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம். மக்கள் 100% வாக்களிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.