சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

 
mkstalin

நீலகிரி மாவட்டம்‌ ஏலமன்னா கிராமத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு முதலமைச்சர்‌ மு.கஸ்டாலின்‌ இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை உயிரிழப்பு விவகாரம்: வனத்துறை விசாரணைக்கு ஆஜரான ரவீந்திரநாத் எம்.பி.,

இதுதொடர்பாக முதலமைச்சர்‌ மு.கஸ்டாலின்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம்‌, ஏலமன்னா கிராமம்‌, மேங்கோ ரேன்ஜ்‌ அஞ்சல்‌. பகுதியைச்‌ சேர்ந்த திருமதி. சரிதா (வயது 29) க/பெ. பிரசாந்த்‌ என்பவர்‌ கடந்த 29.12.2023-ம்‌ தேதி அன்றும்‌, மேங்கோ ரேன்ஜ்‌ ஞ்சல்‌, எஸ்டேட்‌ தொழிலாளர்‌ குடியிருப்பு ஜார்கண்ட்‌ மாநிலத்தைச்‌ சேர்ந்த சிறுமி நான்சி (வயது 3) தபெ.சிவ்சங்கர்‌ என்பவர்‌ கடந்த 06.01.2024 அன்றும்‌ சிறுத்தை தாக்கியதன்‌ காரணமாக உயிரிழந்தார்கள்‌ என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும்‌ வேதனையடைந்தேன்‌.  

விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும்‌ உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, வருத்தத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ உயிரிழந்தவர்களின்‌. குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம்‌ ரூபாய்‌ தமிழக அரசின்‌ சார்பில்‌ வழங்கவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.