ரூ. 1000 கோடி வசூல் கன்பார்ம்.. 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் மாஸான டிரெய்லர்..!

 
1 1

2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் திரையரங்குகளில் ரிலீசானது 'காந்தாரா'. சப்தமி கெளடா, மனசி சுதீர், சுவராஜ் உள்ளிட்டட பலரும் நடித்து வெளியான இப்படத்தில் அரசாங்க உதவியுடன் வனத்தை அபகரிக்க அரசியல் ஒருவர் முயற்சிக்கிறார். இதனை எதிர்த்து நிற்கிறார் கதாநாயகன். இதனையடுத்து நடக்கும் சம்பவங்களாக 'காந்தாரா' உருவாகி இருந்தது.

காந்தாரா ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், உலக அளவில் இப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. மேலும் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும், பழங்குடியின மக்களின் தெய்வமாக ரிஷப் ஷெட்டி வெளிப்படுத்தி இருந்த நடிப்பும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருந்தது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி காரணமாக, அதன் முந்தைய பாகத்தை இயக்கும் வேலைகளில் இறங்கினார் ரிஷப் ஷெட்டி. தற்போது பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது காந்தாரா சாப்டர் 1'. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ருக்மணி வசந்த் , பிரபல மலையாள நடிகர் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் 'காந்தாரா சாப்டர் 1' டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. பழங்குடியின் மக்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் மீது நடக்கும் அரச பயங்கரவாதம், குலத்தெய்வ வழிபாடு போன்றவை இப்படத்தில் இடம்பெற்றுள்ளது டிரெய்லரிலே தெரிகிறது.

முழுக்க முழுக்க பிரம்மாண்டமாக, மிரட்டலான காட்சிகளுடன் இந்த படம் உருவாகியுள்ளது.. இந்தாண்டின் பிரம்மாண்ட ரிலீசாக 'காந்தாரா சாப்டர் 1' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் கட்டாயமாக பாக்ஸ் ஆபீஸில் ரூ. 1000 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி 'காந்தாரா சாப்டர் 1' பான் இந்திய ரிலீசாக வெளியாக இருக்கிறது. அதே போல் தனுஷின் இட்லி கடை படமும் அக்டோர் ஒன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனால் தமிழில் இந்த இரண்டு படங்களுக்கும் இடையில் பாக்ஸ் ஆபீஸில் போட்டி இருக்கலம் என கூறப்படுகிறது.