10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ₹30 இலட்சம் ஒதுக்கீடு!

 
tn

2024-25 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் இதோ:- 

mrk

  • விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ₹2 கோடி நிதி ஒதுக்கீடு
  • பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு
  • பயறு பெருக்குத் திட்டத்தை 4.75 லட்சம் ஏக்கரில் செயல்படுத்த ரூ.40.27 கோடி ஒதுக்கீடு
  • ஊட்டி ரோஜா பூங்காவில் ரூ.5  லட்சம் நிதியில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்யப்படும்
  • சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதிபாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 30 இலட்சம் ஒதுக்கீடு

mrk

  • வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு
  • ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்
  • புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
  • 2.22 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ₨773.23 கோடி ஒதுக்கீடு
  • விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

mrk

  • எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்ய ரூ.45 கோடி ஒதுக்கீடு
  • பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீடு
  • மகசூலை அதிகரிக்க, சாகுபடிப பரப்பு விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த ரூ.3கோடி ஒதுக்கீடு
  • சூரியகாந்தி பயிரின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க ரூ.2 கோடியில் விரிவாக்கத் திட்டம்
  • வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்க செடிகள் வழங்கப்படும்