கார் ஓட்டுநரின் வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.9000 கோடி - அடுத்த நடந்த டுவிஸ்ட்!

 
bank account

சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநரின் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவரது செல்போனிற்கு வங்கியில் இருந்து குருஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குருஞ்செய்தியில், உங்களது வங்கி கணக்கில் 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் இது யாரோ தன்னை ஏமாற்றுவதற்காக இப்படி செய்துள்ளார்கள் என நினைத்து அதை நம்பாமல் இருந்துள்ளார். மேலும் இதனை உறுதி செய்வதற்காக தனது நண்பர் ஒருவருக்கு 21,000 ரூபாய் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அந்த பணம் அவரது வங்கு கணக்கிற்கு சென்றது தெரிந்ததும் இது உண்மை தான் என்பது அவருக்கு தெரியவந்தது. இதன் காரணமாக மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளார் ராஜ்குமார். 

இந்த நிலையில், தவறுதலாக ராஜ்குமார் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டதை அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக ராஜ்குமாரை தொடர்பு கொண்டனர். அவரிடம் தவறுதலாக உங்கள் வங்கி கணிக்குற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனை திருப்பு செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் செலவு செய்த 21 ஆயிரம் ரூபாயை திருப்பி தர வேண்டாம் எனவும், வாகன கடன் வழங்குவதாகவும் கூறி அவரிடம் இருந்து அந்த பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.