மிக்ஜாம் புயல் பேரிடர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரூ.10 லட்சம் நிதி!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் கே.பாலகிருஷ்ணன் .
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் திரு.பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் திரு.பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் சந்தித்து,
— TN DIPR (@TNDIPRNEWS) December 13, 2023
(1/2) pic.twitter.com/o350ebNASs
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 710 லட்சம் வழங்கிய பின் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் தொடரும் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்; வெள்ள மீட்பு பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது இயற்கை பேரிடர் காலத்தில் அரசியலுக்காக எதிர்கட்சியினர் குறைகூறுகின்றனர்; மழைநீர் வடிகால் பணி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.