திராவிட வரலாறு ஆய்வுக்காக ‘எம்.கருணாநிதி உதவித்தொகை’ - கேம்பிரிட்ஜ் பல்கலை.க்கு சபரீசன் - செந்தாமரை தம்பதி நிதியுதவி..

 
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  சபரீசன் - செந்தாமரை தம்பதி  நிதியுதவி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  சபரீசன் - செந்தாமரை தம்பதி  நிதியுதவி

திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த  உலகளாவிய ஆய்வை ஊக்கப்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  சபரீசன் - செந்தாமரை தம்பதி  நிதியுதவி அளித்துள்ளனர். 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலின், சென்னையில் ஒரு சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருகிறார். முதலமைச்சரின் மருமகன் சபரீசன், இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், திமுகவில் முக்கிய நபராக இருந்து வருகிறார். தொழில் முனைவோரான சபரீசனும், அவரது மனைவியும் கல்வியாளருமான செந்தாமரை ஸ்டாலின் தம்பதி இணைந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி அளித்துள்ளனர்.  இதன் மூலம் கேம்பிரிட்ஸ் பல்கலையில் திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளனர்.     தமிழ்நாட்டின் சமூக நீதியின் பாரம்பரியத்துடன் உலகளாவிய கல்வித்துறையை இணைக்கும் ஒரு முக்கிய அடையாளமாக,  இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளனர்.  

திராவிட இயக்கம் மற்றும் தென்னிந்தியாவில் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக-பொருளாதார மரபு குறித்த மேம்பட்ட ஆராய்ச்சியை ஆதரிப்பதற்காக இந்த நிதியுதவி, நிரந்தர முனைவர்  பட்டத்தை வழங்கும்.  மேலும் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நவீன தமிழ்நாட்டின் பாதையை ஆழமாக வடிவமைத்த சமத்துவ இயக்கமான திராவிட இயக்கத்திலிருந்து உருவான அரசியல் சிந்தனை, பொதுக் கொள்கை மற்றும் பொருளாதார கட்டமைப்புகளில் கவனம் செலுத்தும் முதுகலை ஆராய்ச்சிக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்.

ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது – கருணாநிதி! வைரலாகும் வீடியோ 

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், திராவிட இயக்கத்தின் ஒரு உயர்ந்த நபராகவும் இருந்த எம். கருணாநிதியின் நினைவாக, இந்த உதவித்தொகைக்கு   ‘எம். கருணாநிதி உதவித்தொகை’ என்று பெயரிடப்படும். இந்த உதவித்தொகைகள் திராவிட வளர்ச்சி மாதிரியின் மையமாக இருக்கும் மதிப்புகளான சமூக நீதி, கல்வி அணுகல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பை நினைவுகூரும் என்றும், தமிழ்நாட்டில் திராவிட அரசியல், பொருளாதாரம் மற்றும் வரலாறு குறித்த ஆராய்ச்சியை ஆதரிக்கும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு எம். கருணாநிதி முனைவர் பட்ட உதவித்தொகை முன்னுரிமையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆராய்ச்சி மற்றும் உரையாடல் மூலம், திராவிட வரலாறு மற்றும் அனுபவம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் மதிப்புமிக்க பாடங்களை வழங்க முடியும் என்று நம்புவதாகவும்,  தங்களைப் பொறுத்தவரை, இது தனிப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள சபரீசன் - செந்தாமரை தம்பதி, கேம்பிரிட்ஜில் கலைஞர்  கருணாநிதியை கௌரவிக்க முடிந்ததில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.