சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கிற்கு சீல்

 
tn

கனமழையின் காரணமாக சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில்  மொத்தம் 20 பேர் காயமடைந்த நிலையில், பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி உயிரிழந்துள்ளார். 19 பேரில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், 11 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற 5 வயது ஆண் குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது.

fb

சரிந்து விழுந்த மேற்கூறையை பொக்லைன் இயந்திரத்துடன் அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்ட நிலையில் விபத்து நடந்த பகுதியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். இந்நிலையில் சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்தில் உரிமையாளர் அசோக் மற்றும் மேலாளர் வினோத் ஆகியோர் மீது ஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேற்கூரை இரண்டு தூண்கள் மட்டுமே தாங்கி பிடித்திருந்தது. இதன் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tn

இந்நிலையில் சைதாப்பேட்டையில் விபத்து ஏற்பட்ட பெட்ரோல் பங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மழையால் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.