கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஊழியர்களுக்கு நாளை சம்பளம்
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஊழியர்களுக்கு நாளை சம்பளம் அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ,கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஊழியர்களுக்கு சம்பளம் நாளை வழங்கப்படும்.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது நிர்வாக காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் ஆகியது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நிதித்துறையின் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணை எண் 176 இன் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவம் சாரா பணியாளர்கள் அனைவருக்கும் நாளை சம்பளம் வழங்கப்படும் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்கள்.என்று குறிப்பிட்டுள்ளார்.